கோண்டாவில் பகுதியில் உள்ள காவல்துறை உத்தியோகத்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்

0
454

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள காவல்துறை உத்தியோகத்தரின் வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் காவல்துறை உத்தியோகத்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கடமையாற்றும் , காவல்துறை உத்தியோகத்தரின் கோண்டாவில் வீட்டினுள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 10 பேர் கொண்ட வன்முறை கும்பல் புகுந்தே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற மரணச் சடங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது மோதலாக மாறியுள்ளது. அதன் பின்னணியில் காவல்துறை உத்தியோகத்தரின் வீட்டினுள் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.