மருத்துவமனைகள், நோயாளிகளை குறி வைத்து மீண்டும் மீண்டும் தாக்கும் ரஷ்ய படைகள்!

0
310

உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், நோயாளிகளை குறி வைத்து ரஷ்ய படைகள் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக அசோசியேட் பிரஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக குறைந்தபட்சம் 34 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என ரஷ்யாவிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்ய ஏவுகணைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இலக்குகளை சரியாக தாக்காமல் செயலிழந்து போகிறது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய நாள் முதல் 134 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 184 பேர் காயமுற்றுள்ளனர் எனவும், இதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உக்ரைன் சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.