நாளைய தினம் மின்வெட்டு தொடர்பாக வெளியான தகவல்!

0
435

நாட்டில் நாளைய தினம் (26) மின்வெட்டை மேற்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரையான காலப்பகுதியினுள் மூன்று மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களும்,

மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பதினொரு மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் நாற்பது நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதேபோன்று P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு காலை ஒன்பது மணி தொடக்கம் பிற்பகல் ஆறு மணிவரையான காலப்பகுதியினுள் மூன்று மணித்தியாலங்களும்,

மாலை ஆறு மணி தொடக்கம் இரவு ஒன்று மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் நாற்பது நிமிடங்களும், மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.