எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை ரஷ்ய ரூபிள்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை-ரஷ்ய அதிபர்

0
347

நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை ரஷ்ய ரூபிள்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைச் செயற்படுத்த முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த மாற்றங்களை ஒரு வாரத்திற்குள் செயற்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் மத்திய வங்கியும் இந்த நடவடிக்கைகளை ரஷ்ய நாணயத்திற்கு எவ்வாறு நகர்த்துவது என்பது குறித்த ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு ஒரு வாரம் அவகாசம் இருப்பதாகவும், எரிவாயு ஒப்பந்தங்களில் தொடர்புடைய மாற்றங்களைச் செய்ய உத்தரவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் மேற்கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

இதற்கிடையே, ரஷ்யா நட்பற்ற நாடுகளின் பட்டியலை அறிவித்தது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பிரிட்டன், ஜப்பான், கனடா, நோர்வே, சிங்கப்பூர், தென்கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும்.

ரஷ்ய எரிவாயு மீதான தடைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பல ஐரோப்பிய நாடுகள் மாஸ்கோவிலிருந்து உக்ரைன் வழியாக எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.

இந்நிலையில், எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற புடினின் அறிவிப்பு, ஐரோப்பாவை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.