தக்க தருணத்தில் சிறிலங்காவை காப்பாற்றும் இந்தியா!

0
289

இந்திய கடனின் கீழ் 35,000 மெட்ரிக் டொன் 92 ஒக்டேன் பெட்ரோலுடன் கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி தீர்க்கப்படாததால் நாட்டில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் தொடர்ந்து வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதேவேளை, வரிசையில் காத்திருக்கும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் மோதல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தத்க்கது.

இதனால், ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்களை கண்காணிக்க இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தக்க தருணத்தில் இந்தியா கை கொடுத்துள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.