சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள இலங்கை!

0
518

இலங்கை அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அதேவேளை நாட்டின் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உலக வங்கியின் உதவியை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் அந்நிய செலாவணி கையிருப்பு 70 வீதமாக குறைந்ததுடன் உணவு, எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் போராடி வருகிறது.

நாட்டின் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் ஏற்படும் பதற்றத்தை தணிக்க இராணுவத்தினரை இலங்கை அரசு கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.

பெப்வர மாதத்தில் இருந்து 1.31 பில்லியன் என்ற சொற்ப அந்நிய செலாவணியை கையிருப்பில் வைத்திருக்கும் இலங்கைக்கு ஜூலை மாதம் காலவதியாகும் ஒரு பில்லியன் டொலர் சர்வதேச இறையாண்மை பிணை முறிகள் உட்பட இந்த ஆண்டில் 4 பில்லியன் டொலர் கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.

நெருக்கடியில் இருந்து மீள வழியை தேடுவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்த மாதம் வொஷிங்டன் சென்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

உலக வங்கியிடம் கோரியுள்ள நிதியுதவி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை, தமக்கு  வரவு செலவுக்கான உதவியே தேவை எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை உலக வங்கியிடம் இருந்து பெறக் கூடிய கடன் தொகை தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. உலக வங்கி சாதாரணமாக ஏற்றுமதிகளை அதிகரிப்பது, பொருளாதார போட்டி தன்மை அதிகரிப்பது மற்றும் வளர்ச்சிக்கான நிதியுதவியை வழங்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.