அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையில் நிலவும் இடைவெளியை நிரப்புவதற்குதயார்- சுமந்திரன்

0
422

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையில் நிலவும் இடைவெளியை நிரப்புவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற சர்வ கட்சிகூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகப்பகுதியில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் மில்லியன் கணக்கில் டொலரை முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என தெரிவித்த அவர் இலங்கையில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்யவும் அவர்கள் தயார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

டயானா கமகேயின் யோசனையை ஆதரித்த சுமந்திரன் இலங்கையின் சமமான மக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதன் மூலம் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கத் தயார் என தெரிவித்தார்.