மல்வத்து -அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள முக்கிய கடிதம்!

0
353

நிலையான அபிவிருத்திக்கான திட்டத்தை வகுப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின்; சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதன் முக்கியத்துவம் மற்றும் 13 விடயங்களை வலியுறுத்தி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை மகாநாயக்க தேரர்கள் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்க அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உள்ளூர் பொருளாதார மாதிரியை உருவாக்குதல் ஆகியவையும் அவர்களின் கடிதத்தில் முன்மொழிவுகளாக பதிவிடப்பட்டுள்ளன.

வெளிப்படையான பொருளாதாரத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டுப் பணம் அனுப்புவதை அதிகரிக்கவும், ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் அந்தக் கடிதம் முன்மொழிகிறது.புதிய முதலீடுகளை ஊக்குவித்தல், பொதுக் கடனை மறுசீரமைத்தல், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் விரயம், ஊழல் மற்றும் வளங்களை துஸ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதற்கான நிலையான திட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.