பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் உதவியை நிராகரித்த உக்ரைன் பெண் செய்தியாளர்

0
405

ரஷ்யாவில், உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நேரலையில் தொலைக்காட்சியில் குரல் கொடுத்த பெண் செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புகலிடம் அளிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முன்வந்தார்.

ஆனால், மேக்ரானின் உதவியை அந்தப் பெண் செய்தியாளர் நிராகரித்துவிட்டார்.

சில நாட்களுக்கு முன், ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில், நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, திடீரென, ’போரை நிறுத்துங்கள், ரஷ்ய அரசு கூறுவதை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் செய்தி வாசிப்பவரின் பின்னால் தோன்றினார் ஒரு பெண்.

அவரது பெயர் Marina Ovsyannikova. அவர் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றின் எடிட்டர் ஆவார்.

நேரலையில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து Marina மாஸ்கோவிலுள்ள Ostankino நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும், அவர் மீது அங்கீகாரமற்ற பொது நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு 30,000 ரூபிள்கள் அபராதமும், 10 நாட்கள் சிறை அல்லது சமூக சேவை தண்டனையாக அளிக்கப்படலாம் என்றும் BBC செய்தி வெளியிட்டது.