பயணிகளுடன் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து

0
397

தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற போது குறித்த பஸ் தீப்பிடித்துள்ளது. எனினும் அதிஷ்டவசமாக எருவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பேருந்தில் சிக்கிய பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, வலஸ்முல்ல ஹிங்குருவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரேக் செயலிழந்ததால் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.