உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் பிரபல நடிகை பலி!

0
519

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் பிரபல நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து ரஷ்யபடை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உள்பட பலா் உயிரிழந்து வருகின்றனா்.

இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. உக்ரைன் மீதான போருக்கு எதிா்ப்பு தெரிவித்து ரஷ்யா்களே கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கீவ் நகரில் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்யப் படைகள் ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்கியதில், கட்டடத்தில் இருந்து 67 வயதான பிரபல நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ் பலியானார்.

இவர் உக்ரைனின் உயரிய திரையுல விருதுகளை பெற்றுள்ளார். உக்ரைனிய ராணுவ உள்கட்டமைப்பை மட்டுமே குறிவைத்து இந்த சிறப்பு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒக்சானா மறைவை அவர் சார்ந்துள்ள குழுவான ”யங் தியேட்டர்” உறுதி செய்துள்ளது. அதன் அறிக்கையில், கியேவில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலில், உக்ரைனின் தகுதியான கலைஞர் ஒக்சானா கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.