எரிபொருள் இன்மையால் பொலிசாருக்கும் ஏற்பட்ட நிலை!

0
351

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தடுப்பாட்டினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நாடுகளிலும் கடனுதவி கோரியுள்ளது.

இலங்கை மக்கள் எரிபொருள் நிலரப்பு நிலையங்களிலும் , எரிவாயுவுக்காகவும் நீண்ட வரிசையில் நெடுநேரமாக காத்திருக்கும் அவல நிலையும் தோன்றியுள்ளது.

இந்நிலையில் இலங்கை போக்குவரத்து  பொலிஸார், எரிபொருள் இன்மையால் தமது மோட்டார் சைக்கிளை வீதியில் தள்ளிச்செல்லும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.