யாழ் பாசையூர் ஈச்சமோட்டை பகுதியில் 25 பவுண் கொள்ளை

0
332

யாழ் பாசையூர் ஈச்சமோட்டை பகுதியில் தனிமையில் இருந்த வயோதிபரின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் சுமார் 25 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதாக யாழ்.போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் தனிமையில் வசித்த வந்த நிலையில் அவர் வெளியில் சென்றதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டை உடைத்து புகுந்து சுமார் 25 பவுண் தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொள்கின்றனர்.