73 ஆவது சுகந்திர தினத்தில் தேசிய கீதம் பெரும்பான்மையினரின் மொழியில் மட்டுமே..

0
446

 

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர்

ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை காரணமாக இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகளைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அனைத்துப் படையினரும் பி.சி.ஆர். அல்லது அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.