துறைமுக தொழிற்சங்கங்களை சந்திக்கும் பிரதமர்

0
573
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொட்பில் துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று  காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது தமது கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே தெரிவித்தார்.

துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் துறைமுக தொழிற்சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். அது தொடர்பான யோசனை இன்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர்  தெரிவித்தார்.