மியன்மாரின் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்

0
506

மியன்மாரின் ஆட்சியை தாம் கைப்பற்றியதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் ஷான் சூக்கி உள்ளிட்ட அரச தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த நாட்டு இராணுவம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

2011ம் ஆண்டு மியன்மார்க் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த நாட்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னர், பாராளுமன்றம் கூடவிருந்த நிலையிலேயே, அந்த நாட்டு அரச தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.