கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ?

0
460

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் குழந்தையின் வளர்ச்சிக்காக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கூட சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு மூலிகை தேநீரை எடுப்பது உண்டு.

அதில் புதினா தேநீரை அதிகமானோர் எடுத்து கொள்ளுவார். இந்த புதினா தேநீரின் பல நன்மைகளை உள்ளது.

புதினா தேநீரை கர்ப்ப காலத்தில் பெண்கள் குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், அரிப்பு மற்றும் நீரிழிவு நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

இருப்பினும் இதனை அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ளக்கூடாது. சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

ஏன் எடுத்து கொள்ளக்கூடாது?

கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற இரைப்பை குடல் அறிகுறிகளை போக்க புதினா தேநீர் பயன்பட்டாலும் அது நிலைமையை தீவிரப்படுத்தக்கூடும். வயிற்று திசுக்கள் மற்றும் இரைப்பை பிரச்சினைகளை அது ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
புதினா அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது இடுப்புப் பகுதி மற்றும் கருப்பைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மாதவிடாய் தூண்டப்பட்டு கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு ஏற்படலாம்.
புதினா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் சில நேரங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு GERD, சிறுநீரக கற்கள் போன்ற மோசமான விளைவுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
புதினா தேநீர் ஆன்டாக்சிட்கள் போன்ற சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உறிஞ்சுவதில் தலையிடக்கூடும். இது குறைபிரசவத்திற்கு வழி வகுக்க வாய்ப்பு உள்ளது. இந்த புதினா தேநீர் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தி குறைப்பிரசவ ஆபத்தை அதிகரிக்கும்.