அரசியல்வாதியின் அதிகாரப் போட்டியினால் இ.போ.சபை நிர்வாகம் பாதிப்பெனச் சுட்டிக்காட்டி வடக்கில் இ.போ.சபை பஸ்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடலாம் எனத் தெரியவருகின்றது. இலங்கைப் போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குணபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் இ.போ.ச. தொழிற்சங்கங்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என அறியமுடிகிறது. வடபிராந்தியத்தில் குறைந்தளவானோரைக் கொண்ட கட்சி ஒன்றின் நடவடிக்கையால் குணபாலச்செல்வனின் நியமனம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த செல்லத்துரை குணபாலச்செல்வன், இலங்கை போக்குவரத்துச் சபையில் நீண்ட கால சேவை புரியும் அனுபவமிக்கவர். கடந்த ஆட்சியில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையால் அவர் யாழ்ப்பாணம் சாலை முகாமையாளர் பதவியிலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டார். மும்மொழித் திறமையுடைய அவர், கடந்த காலங்களில் பல ஊழியர்களின் பதவி நிலை பிரச்சினைகளை சீர்செய்து வழங்கியிருந்தார். இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வனுக்கு, வடபிராந்திய பிரதான முகாமையாளராக நேற்றுமுன்தினம் நியமனம் வழங்கப்பட்டது. அவருக்கு உரிய நியமனக் கடிதத்தை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் வழங்கி வைத்த நிலையில் இன்று முற்பகல் அவர் பதவி ஏற்க ஏற்பாடாகி இருந்தது. இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வத்தின் நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனை தடுத்தே தீருவேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ,தொழிற்சங்கத்துக்கு உறுதியாகத் தெரிவித்திருந்தார். அதனால் வடபிராந்தியத்தின் 7 சாலைகளினதும் தொழிற்சங்கங்கள் நேற்றும் காலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்து எஸ்.குணபாலச்செல்வத்தின் நியமனத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர். அவரது நியமனத்தை நிறுத்தினால் வடபிராந்தியத்தின் 7 சாலைகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தனர். எனினும் நியமனம் நிறுத்தப்படாது என உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பணிப்புறப்பணிப்பில் ஈடுபட அவசியம் ஏற்படாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் வடபிராந்திய பிரதான முகாமையாளராக செல்லத்துரை குணபாலச்செல்வத்தை நியமித்தமையை இடைநிறுத்துமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவதை நிறுத்தும் செயலைத் தமிழ் அரசியல்வாதி ஒருவர் மேற்கொள்கின்றமையை ஏற்க முடியாது எனத் தெரிவித்து வடபிராந்தியத்தின் 7 சாலைகளின் தொழிற்சங்கங்களும் இன்று போராட்டத்தில் குதிக்கும் என அறிய முடிகிறது. இதனால் இ.போ.ச.பஸ் சேவைகள் வடக்கில் இடம்பெறுமா என்பது இன்றே தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

0
555

அரசியல்வாதியின் அதிகாரப் போட்டியினால் இ.போ.சபை நிர்வாகம் பாதிப்பெனச் சுட்டிக்காட்டி வடக்கில் இ.போ.சபை பஸ்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடலாம் எனத் தெரியவருகின்றது.

இலங்கைப் போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குணபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் இ.போ.ச. தொழிற்சங்கங்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என அறியமுடிகிறது.

வடபிராந்தியத்தில் குறைந்தளவானோரைக் கொண்ட கட்சி ஒன்றின் நடவடிக்கையால் குணபாலச்செல்வனின் நியமனம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த செல்லத்துரை குணபாலச்செல்வன், இலங்கை போக்குவரத்துச் சபையில் நீண்ட கால சேவை புரியும் அனுபவமிக்கவர். கடந்த ஆட்சியில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையால் அவர் யாழ்ப்பாணம் சாலை முகாமையாளர் பதவியிலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டார்.

மும்மொழித் திறமையுடைய அவர், கடந்த காலங்களில் பல ஊழியர்களின் பதவி நிலை பிரச்சினைகளை சீர்செய்து வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வனுக்கு, வடபிராந்திய பிரதான முகாமையாளராக நேற்றுமுன்தினம் நியமனம் வழங்கப்பட்டது.

அவருக்கு உரிய நியமனக் கடிதத்தை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் வழங்கி வைத்த நிலையில் இன்று முற்பகல் அவர் பதவி ஏற்க ஏற்பாடாகி இருந்தது.

இந்த நிலையில் செல்லத்துரை குணபாலச்செல்வத்தின் நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதனை தடுத்தே தீருவேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ,தொழிற்சங்கத்துக்கு உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

அதனால் வடபிராந்தியத்தின் 7 சாலைகளினதும் தொழிற்சங்கங்கள் நேற்றும் காலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்து எஸ்.குணபாலச்செல்வத்தின் நியமனத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர்.

அவரது நியமனத்தை நிறுத்தினால் வடபிராந்தியத்தின் 7 சாலைகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தனர். எனினும் நியமனம் நிறுத்தப்படாது என உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பணிப்புறப்பணிப்பில் ஈடுபட அவசியம் ஏற்படாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் வடபிராந்திய பிரதான முகாமையாளராக செல்லத்துரை குணபாலச்செல்வத்தை நியமித்தமையை இடைநிறுத்துமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவதை நிறுத்தும் செயலைத் தமிழ் அரசியல்வாதி ஒருவர் மேற்கொள்கின்றமையை ஏற்க முடியாது எனத் தெரிவித்து வடபிராந்தியத்தின் 7 சாலைகளின் தொழிற்சங்கங்களும் இன்று போராட்டத்தில் குதிக்கும் என அறிய முடிகிறது.

இதனால் இ.போ.ச.பஸ் சேவைகள் வடக்கில் இடம்பெறுமா என்பது இன்றே தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.