வவுனியாவில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

0
492

வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு இன்றைய தினம் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றும் பணி இன்று தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

அந்தவகையில், வவுனியா மாவட்டத்துக்கு 1700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. அதனை செலுத்தும் பணிகள் வவுனியா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன், வைத்தியசாலை பணிப்பாளர் காண்டீபன் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட பலருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.