இலங்கையில் கொரோனா தடுப்பூசி பெற்ற பெண் வைத்தியசாலையில்

0
435

நாட்டில் நேற்றையதினம் கொவிஷீல்ட் டொஸ் பெற்றுக் கொண்ட ஒருவர் ஒவ்வாமை காரணமாக அங்கொட தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

குறித்த நபர் இரவு 09.10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் 40 வயதுடைய பெண்ணொருவரெனவும் தெரிய வருகிறது.

 

இந்நிலையில் காவலாளியாக கடமையாற்றும் அவருக்கு சாதாரண நிலை ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.