ருமேனியா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு கொரோனா நோயாளர்கள் பலி

0
391

ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலையின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 100 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பாதுகாப்பாக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்குமுன் சில நோயாளர்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் ருமேனிய அவசர சேவைகள் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, ருமேனியாவில் வைரஸ் தடுப்பு தடுப்பூசியைத் தொடங்க சுகாதார அதிகாரிகள் ஏற்பாடு செய்த மேட்டி பால்ஸ் வைத்தியசாலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.