இந்த உணவுகளை மட்டும் அதிகமாக சாப்பிடாதீர்கள்! மீறி சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் இவை தான்

0
369

பொதுவாகவே பிடித்த உணவுகளை பலர் அதிகளவில் சாப்பிடுவார்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பது பற்றி பார்ப்போம்.

இஞ்சி அஜீரணத்தைப் போக்கும். சளியை வெளியேற்றும் கொழுப்பைக் குறைக்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இஞ்சியை அதிகமாகச் சாப்பிட்டால் மென்மையான லேசான குரல் இருப்பவர்களுக்கு அது இறுகிவிடும்.

வாயு தொல்லைக்கு நிவாரணம் பூண்டை அதிகமாக எடுத்துக்கொள்வதால், ரத்தத்தை வேகமாக பரவச் செய்து கொதிக்க வைக்கும். அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு வயிற்றில் கரு இருந்தால் அது கலையும் வாய்ப்புண்டு. குடலை எரியச் செய்யும் ஆண் தன்மை இழக்க ஆரம்பிக்கும்.

உப்பின் அளவு அதிகமானால் யூரிக் அமிலம் அதிகரிக்கும். மூட்டு பிரச்சினை உண்டு. சிறு நீராகக் குழாய் பிரச்சினை ஏற்படும். 

எலுமிச்சை கொழுப்பை குறைப்பது முதல் ஏராளமான நன்மைகளைத் தரும் என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இதயம் பலவீனப்படும்.

டீயை அதிகமாகக் குடித்தால் உடல் நடுக்கம் உண்டாகும். காய்ச்சல், வீக்கம், பசியின்மை ஆகியவை உண்டாகும். ஆண்களுக்கு விந்துவின் வீரியம் குறையும்.

காபி அதிகமாக குடித்தால் பித்தம் அதிகரிக்கும் அதன் மூலம் கை, கால் நடுங்கும் நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கண்ணெரிச்சல் அதிகரிக்கும்.

மிளகாயை அதிகமாகச் சாப்பிட்டால் உடலின் வெப்பம் அதிகரிக்கும் அதனால் உடலில் சளித்தொல்லையும் அதிகரிக்கும். 

முருங்கையில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. அதுவே முற்றிவிட்டால் அதன் விதையை மட்டும் பிரித்தெடுத்து வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடிக்க உடல் வலுப்பெறும். ஆனால் முற்றிய முருங்கையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும். சளியும் அதிகரிக்கும்.

மாங்காயை அதிகமாகச் சாப்பிட்டால் வயிறு கட்டும் பிரச்சினை உண்டாகும். சளி அதிகமாகும். இடுப்பு வலி உண்டாகும். உடலில் பித்தமும் அதிகரிக்கும்.