உடல் ரீதியாக சித்திரவதை! இலங்கை கடற்படையிடம் சிக்கி உயிர்பிழைத்த மீனவர்

0
428

படகிலிருந்த மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், கடந்த 20ம் தேதி இருவரின் உடல் இலங்கையில் கரை ஒதுங்கியதாகவும், அடுத்த நாள் மீதி இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலும் இறந்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர், அதில் அவர்களின் உடல்களில் காயங்கள் இருப்பதுபோல காணப்பட்டதால், இலங்கை கடற்படையினர் தாக்கியிருக்க கூடும் என கூறி, மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே கடந்த 23ம் தேதி இறந்த 4 பேரின் உடல்களையும் இலங்கை கடற்படையினர், இந்திய எல்லையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர், இதனை அடுத்து 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்திடம் சிக்கி உயிர்பிழைத்த மீனவர் சுரேஷ் குமார் தான் நிரபராதி என விடுவிக்கப்பட்ட பின்னரும் கையில் விலங்கிட்டு, தெருத்தெருவாக இழுத்துச் சென்றதாகவும், யாழ்ப்பாணம் சிறையில் உடல் ரீதியாக அடித்து சித்ரவதை செய்ததாக தமிழ் நாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றில் உருக்கமாக இதனைத் தெரிவித்துள்ளார்.