தமிழில் பேசுகிறார் சோனியா காந்தி

0
501

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாடு, அடுத்த மாதம் சென்னையில் நடக்க இருக்கிறது. இதில் பிரியங்கா பங்கேற்று, சோனியா காந்தி பேசிய ‘காணொளி’யை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இந்த காணொளில், சோனியா தமிழில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், அதை கருத்தில் வைத்து, இந்த காணொளியை வெளியிட, காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி, திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம், கலாசாரத்தை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். சோனியா காந்தியும், அவரைப் போலவே காப்பி அடிக்கிறார் என்கிறார்கள் பாரதிய ஜனதா தலைவர்கள். மக்களின் மனதில் இடம்பிடிக்க அரசியல் தலைவர்கள் பலவழிகளை செயல்படுத்தி வருகிறார்கள்.