பப்பாளி பழத்தில் இவ்வளவு ஆபத்து உள்ளதா? இதை கண்டிப்பா தெரிஞ்சிகோங்க!

0
491

பழங்களில் நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரத்தில் ஒருசில பழங்களை அன்றாடம் நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், அதுவே நமக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அந்த வகையில் பப்பாளி பழத்தை அதிக அளவு உண்பதால் உண்டாகும் தீமைகளை பற்றி பார்ப்போம்.

பப்பாளிப் பழத்தில் கரோட்டீன்கள் நிறைந்துள்ளது, இதனை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது சரும பிரச்சனையான Carotenemia-வை ஏற்படுத்துகிறது.

பப்பாளியில் அதிகளவு உள்ள Papain என்சைம் உடலுக்கு சென்றால் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்கள் முதல் 2 மாதங்கள் இப்பழத்தை உண்ணாமல் இருப்பது நல்லது. அதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும்.

பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால் வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படலாம்.

பப்பாளி விதையிலுள்ள”கார்பைன்” என்ற நச்சானது, நாடித்துடிப்பை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தைஏற்படுத்துகிறது

பப்பாளி பழத்தில் விட்டமின் சி நிறைந்துள்ளது, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி ஆக்சிடன்டாக விட்டமின் சி திகழ்கிறது, எனினும் விட்டமின் சி-யை குழந்தைகள் ஒருநாளைக்கு 1200 மில்லிகிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்கள் 2000 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக கல் உருவாக்கத்தை தூண்டுகிறது.

அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.