தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பணத்துக்கு விலைபோக வில்லையெனவும், தமது சமூகத்தின் கோரிக்கைகளை முன்னிறுத்தியே பேரம் பேசியதாகவும் “யுதுகம” அமைப்பின் உறுப்பினர் எல்லே குணவங்ச தேரர் பாராட்டு தெரிவித்துள்ளார். Yuthukama Elle Gunawansa Thero Sri Lanka Tamil News
இது தொடர்பில் “யுதுகம” அமைப்பின் உறுப்பினர் எல்லே குணவங்ச தேரர் கூறுகையில் ,
நாட்டை ஏலத்தில் விட்டு முடிந்ததன் பின்னர், கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஏலத்தில் போட்டனர். ஆனால், தமிழ், முஸ்லிம் சகோதர பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை போகவில்லை.
ஆனால் எமது சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவராவது, தமது இனம் தொடர்பிலோ, தமது நாடு தொடர்பிலோ, நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்தோ எந்தவொரு கருத்தையும் கட்சி மாறுவதற்கான பேச்சுவார்த்தைகளின் போது தெரிவிக்கவில்லை.என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“யுதுகம” அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (11) நடைபெற்ற போதே தேரர் இந்த கருத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!