கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விட்டதாக நேற்று முன்தினம் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. Mp Lasantha Alagiyawanna Explains Sri Lanka Tamil News
இந்த செய்தி பொய்யானது என லசந்த அழகியவண்ண மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,
தனிப்பட்ட முக்கிய விஜயம் ஒன்றின் பேரில் தான் வெளிநாடு சென்றிருந்ததாகவும் அந்த நிலையில் தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனது அரசியல் வாழ்க்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தவும் அதன் அங்கத்துவத்தை அதிகரிக்கவுமே அர்ப்பணித்துள்ளேன். சுதந்திரக் கட்சியுடன் இணைந்து மக்களின் நன்மைக்காக பாடுபடுவதில் நான் திடமாக இருக்கிறேன்.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் நாட்டின் எதிர்கால நன்மைக்காக நேர்மையாக செயற்படுவேன். என்று அவர் தெரிவித்தார்.
குறித்த செய்தி தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!