பராளுமன்ற பகுதியில் இன்று புதிய போக்குவரத்து ஒழுங்கு!

0
495
Parliament Area New Traffic Rule Sri Lanka Tamil News

இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6 மணி வரை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெறுவது குறித்து தமிழ் நியுஸ் செய்தி வெளியிட்டிருந்தது. Parliament Area New Traffic Rule Sri Lanka Tamil News

இதன் அடிப்படையில் பாராளுமன்றம் , அதனை அண்மித்த வீதிகளில் விசேட வாகன போக்குவரத்து திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நண்பகல் 12 மணிமுதல் குறித்த வீதிகளில் வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய புதிய நடைமுறையின் படி கடுவெல அத்துள்கிரிய மாலபே தொடக்கம் பத்தரமுல்ல ஊடாக கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் கொஸ்வந்த சந்தியில் அல்லது பத்தரமுல்ல சந்தியில் இடதுபக்கமாக திரும்பி பாலமதுன சந்தியினால் பாகொட வீதியின் ஊடாக நாவல சந்தி அல்லது நாரன்பிட்டிய வாயிலாக கொழும்பை சென்றடைய முடியும்.

இதேபோன்று கொழும்பிலிருந்து மாலபே அத்துருகிரிய நோக்கி செல்லும் வாகனங்கள் ஆயுர்வேத சுற்றுவட்டத்தின் ஊடாக சென்று புத்கமுவ வீதி அம்பஹா அந்தி , களபளுவாவ வீதியூடாக கொள்வத்தை சந்தியை நோக்கி சென்று அத்துருக்கிரிய நோக்கி பயணிக்கமுடியும் என போக்குவரத்து பொலிசார் அறிவித்துள்ளனர்.

இந்த புதிய நடைமுறை தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites