100 வயது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 வயது காமுகன்

0
503
Youth molestation 100 year old woman Bengal

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உறக்கத்தில் இருந்த 100 வயது மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். (Youth molestation 100 year old woman Bengal)

மேற்கு வங்காளம் மாநிலம், நாடியா மாவட்டத்திற்கு உட்பட்ட கங்கா பிரசாத்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனது அறைக்குள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார்.

இதன்போது, குறித்த அறைக்குள் நுழைந்த 20 வயதுடைய அபிஜித் பிஸ்வாஸ் என்பவன் அவரை மூர்க்கத்தனமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த குடும்பத்தினர் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த அபிஜித் பிஸ்வாஸை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த இளைஞன் மீது பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சக்டா பொலிஸ் நிலைய பொலிஸார் இன்று கல்யானி கிளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் வைத்தனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Youth molestation 100 year old woman Bengal