உளுந்தூர்பேட்டையில் பஸ்ஸூம் லொறியும் விபத்து; 04 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

0
559
4 killed bus accident near ulundurpettai tamil Nadu

தமிழ்நாடு உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பஸ்ஸூம் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். (4 killed bus accident near ulundurpettai tamil Nadu)

சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது.

குறித்த தனியார் பஸ் அஜீஸ் நகர் அருகில் வந்த போது லொறியுடன் மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்ததனால் இந்த விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படையினர் தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதுடன், இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; 4 killed bus accident near ulundurpettai tamil Nadu