கொழும்புத் துறைமுகம் தொடர்பில் சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் யார்? மஹிந்த சமரசிங்க கேள்வி!

0
719

அமைச்சரவையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் சர்ச்சை ஏற்பட்டதாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய அமைச்சர் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.Colombo Port Handover India Issue Sri Lanka Tamil News

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை இந்தியாவுக்கு கையளிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எத்தகைய அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பில் கடந்த அமைச்சரவையில் கலந்துரையாடப்படவும் இல்லை.

எனினும் அமைச்சரவையில் இது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அங்கு பிரதமரின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்ததால் சர்ச்சை நிலவியதாகவும் ஐ. தே. க. அமைச்சரொருவரே ஊடகவியலாளரொருவருக்கு செய்தி வழங்கியுள்ளார்.

குறித்த அமைச்சர் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

Tamil News Live

Tamil News Group websites