இன்று காலை 9 மணியளவில் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் ஆஜராகியதை தொடர்ந்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. DIG Nalaka De Silva CID Case Sri Lanka Tamil News
அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அங்கு ஆஜராகியிருக்கவில்லை.
அதன்படி கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் அவருக்கு இரண்டாவது முறையாகவும் குற்றப்புலானய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!
எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு!
அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!