கபாலி பட நடிகர் ஜோன் விஜய் மீது முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி பாலியல் புகார் கூறியுள்ளார். TV anchor complaint against John Vijay
அண்மைக்காலமாக பெண்களுக்கெதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து #MeToo ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் எழுப்பினார். அதன் பின்னர் இயக்குநர் சுசி கணேசன் மீது ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை புகார் கூறினார். இதனிடையே நடிகர் ஜோன் விஜய் மீது பின்னணி பாடகியும், விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி புகார் கூறியுள்ளார்.
அதில், “2014-ல் ஒருமுறை நான் அவரை பேட்டி கண்டிருந்தேன். அது முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் நள்ளிரவில் அவர் எனக்கு ஃபோன் செய்து, நிகழ்ச்சி ஒளிபரப்பு பற்றி நீங்கள் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என வழிந்தார். உடனே நான் நாளை பேசுகிறேன் என்றேன். ஆனால், அவரோ ஆபாசமாக பேச முற்பட்டார். அவருக்கு போன் செக்ஸ் வேண்டும் என்றார். உடனே உங்கள் மனைவிக்கு நான் ஃபோன் செய்வேன் எனக் கூறியவுடன் தான் அவர் அழைப்பைத் துண்டித்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் நடிகர் ஜான் விஜய் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார். வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கோரும் தவறான மனம் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.