சபரிமலைக்கு சென்ற தமிழ் குடும்பம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் ; பொலிஸார் வேடிக்கை

0
505
protesters attacked tamil couple sabarimala

கேரளாவில் சபரிமலைக்குள் 40 வயதுடைய பெண் ஒருவருடன் செல்வதற்கு முயற்சித்த தமிழ் குடும்பம் மீது, போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தை அங்கு இருந்த பொலிஸார் வேடிக்கை பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (protesters attacked tamil couple sabarimala)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு போராட்டம் வலுத்துள்ளது.

சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடைபெற்றதுடன், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பெரும் போராட்டம் இடம்பெற்றது.

இந்த நிலையில் கோவிலுக்கு சென்னையில் இருந்து சென்ற தமிழ் நாட்டு தம்பதிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சில பெண்களும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்த நிலையில் பொலிஸ் அந்த சம்பவம் நடக்கும் போது, அதனை வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகின்றது.

பொலிஸார் போராட்டக்காரர்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்த நிகழ்வு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; protesters attacked tamil couple sabarimala