ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும்

0
519
NGT order Sterlite panel file report November

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. (NGT order Sterlite panel file report November)

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்துவரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.

தமிழக அரசு கூறுவது போன்று ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு உள்ளதா? இல்லையா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்தக் குழு ஆலையை ஆய்வு செய்து, பொது மக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தது. வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆய்வுக் குழுவுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன், முடிவடையும் நிலையில், ”ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்” என சிறப்புக்குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்த போது, ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவிற்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை அவகாசம் அளித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

நவம்பர் 30 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் வழக்கை நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; NGT order Sterlite panel file report November