முதலாளித்துவத்துக்கு அதிதீவிரமாக ஆதரவளிப்பவைதான் பாஜக-வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.BJP’s ultra bourgeois support – Mayawati Review india tamil news
சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்தையொட்டி, பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் மாயாவதி பேசியுள்ளார்.
அப்போது, “ஆர்எஸ்எஸ் பின்னணியுடன் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து நாட்டில் விரும்பத்தகாத பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர்; தலித்துக்கள், பழங்குடியினர், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள்தான் இந்த கொடுஞ்செயல்களால் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
பாஜக அரசு காட்டி வரும் அலட்சியப் போக்கும், மெத்தனமும்தான் இதற்கு மூல காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போபர்ஸ் ஊழல் நடந்தது போல தற்போது பாஜக ஆட்சியில் ரபேல் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆனால், அதுகுறித்து பதிலளிக்க வேண்டிய பிரதமரோ இன்றுவரை மவுனம் சாதித்து வருகிறார்; முதலாளித்துவக் கொள்கைகளை அதிதீவிரமாக ஆதரிப்பவையாகவே, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கள் உள்ளன” என்றும் மாயாவதி விமர்சித்துள்ளார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம்! – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது!
- பா.ஜ.கவை வீழ்த்துவதுதான் நோக்கம்..! – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..!
- நான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்..! – விரதம் இருக்கும் கேரள பெண்..!
- ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம்! – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா!
- கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..!
- விளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை! – நடிகர் மற்றும் இயக்குனர் கைது!