ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளது.Jayalalithaa’s death Inquiry right track – Investigation Commission
இதுதொடர்பாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ஆணையமே தானாக முன்வந்து போயஸ் கார்டன் தொடங்கி, அப்போலோ மருத்துவமனை வரை விசாரணைக்கு தொடர்புடையவர்கள் என கருதிய 110 பேரிடம் ஆணையம் விசாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலம் அடிப்படையில், இன்னும் தொடர்புடையவர்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால், குறைந்தது 4 மாத கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எவ்வித காலதாமதமும் செய்யவேண்டிய அவசியம் ஆணையத்திற்கு இல்லை எனவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர், ஆனால் டாஸ்மாக் எப்போதும் திறந்திருக்கிறது! – கமலஹாசன்!
- ரவுடி பினுவுக்கு வரும் 26ம் தேதி வரை நீதிமன்றக்காவல்..!
- வீட்டிற்கே மதுபானங்கள்..! – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..!
- மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா!
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!