உருக்குலைந்த அரசு பேருந்து! – பெண் ஒருவர் பலி!

0
545
Twisted government bus - Woman killed india tamil news

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். ஆறு பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Twisted government bus – Woman killed india tamil news

ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து, 32 பயணியருடன், சென்னை கோயம்பேடு நோக்கி, தமிழக அரசு பேருந்து, நேற்று காலை வந்து கொண்டிருந்தது.

பேருந்தை, திருவள்ளூர் அடுத்த, நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிட்டிபாபு, 54, ஓட்டி சென்றார்.

சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பஞ்செட்டி அருகே, முன்னால் சென்ற டிரைலர் லாரி மீது, அரசு பேருந்து வேகமாக மோதியது.

இந்த விபத்தில், அரசு பேருந்தின் இடது பக்கம் உருக்குலைந்து போனது.பேருந்தில் பயணித்த, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், கோப்பன்னபாளம் பகுதியைச் சேர்ந்த கர்ணம் குமாரி லட்சுமி, 51, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இவரது கணவர் கர்ணம் நாகராஜ ராவ், 54, உட்பட, 33 – 55 வயதுடைய, ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஆறு பேரும், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :