ஹரியானா குர்கிராமில் உள்ள அர்காடியா சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காகக் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணன் காந்த் சர்மாவின் மனைவியும் மகனும் சென்றுள்ளனர்.Magistrate’s son shot dead gun fire – video india tamil news
அப்போது அவர்களுடன் இருந்த அவர்களின் பாதுகாப்பு அதிகாரி மகிபால், அவருடைய துப்பாக்கியால் நீதிபதியின் மனைவியை நோக்கி சுட்டுள்ளார்.
பின்பு நீதிபதியின் மகனை நோக்கி சுட்டு, அவரை அவர்கள் வந்த காருக்குள் இழுக்க முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவரை சாலையிலேயே போட்டுவிட்டு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.
பின்பு சதார் காவல் நிலையத்துக்கு சென்ற மகிபால் அங்கேயும் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளார். அவரை அங்கிருந்த போலீஸ் அதிகாரி பிடிக்க முயற்சித்தபோதும் அங்கிருந்து மகிபால் தப்பித்தார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து மகிபாலை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிக்கும் நீதிபதியின் மனைவி ஆபத்தான கட்டத்திலிருந்து தப்பித்து விட்டதாகவும், மகன் உயிருக்கு போராடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பழைய எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் தீவிபத்து!
- சின்மயி விவகாரத்தில் அரசயில் கட்சி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? – தமிழிசை சவுந்தரராஜன்!
- காங். ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் ஒரு தமிழர்கூட உயிருடன் இருக்க முடியாது! – பொன்.ராதாகிருஷ்ணன்!
- கட்சி கொடியை சாதாரண உறுப்பினரை வைத்து ஏற்றுவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி! – கமலஹாசன்!
- ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய அம்ருதா வழக்கு! – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!
- பள்ளியில் விஷம் குடித்த மாணவி! – ஆசிரியர் தண்டனை கொடுத்ததாக புகார்!