மனித எலும்பு கூடுகள் சில யாழ்.அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். Jaffna Atchuvely Human Flush Sri lanka Tamil News
மின்சார கம்பம் நடுவதற்காக அச்சுவேலி பத்தமேணி சூசையப்பர் வீதியில் நிலத்தை தோண்டிய போது அக் கிடங்கில் இருந்து இவ் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்துடன் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் ஏ.ஆனந்தராஜாவும் சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மீட்கப்பட்ட மனித எச்சங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!
இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!
யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!
ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!
மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!