இராயப்பேட்டையில் சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை கொடுக்கும் வகையில் பேருந்து நிறுத்தத்தை மறைத்து வைக்கும் வகையில் பேனர் வைத்துள்ளனர்.bus stop? People looking – chair BJP india tamil news
சென்னை இராயப்பேட்டையில், இராயப்பேட்டை மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இராயப்பேட்டையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனைக்கு சென்னை மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வணிகர் தாமரை மாநில மாநாடு இராயப்பேட்டையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை முன்னிட்டு இராயப்பேட்டை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தை முழுமையாக மறைத்து கொளத்தூர் பகுதி பாஜக சார்பில் பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பயணியர் நிழற்குடையில் அமர முடியாமல் சாலையில் ஆபத்தான நிலையில் பேருந்துக்காக நிற்க வேண்டி இருக்கிறது.
இதனால் வயதானவர்களும், நோயாளிகளும் நடு ரோட்டில் நிற்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பயணியர் நிழற்குடையின் கீழ் அமர்ந்தால் பேருந்து வருவது தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் எத்தனை முறை சொன்னாலும், எத்தனை உயிர்களை சட்ட விரோத பேனரால் இழந்தாலும் அரசியல் கட்சிகள் திருந்துவது போல் தெரியவில்லை.
மக்களின் உயிரின் மேலும், பாதுகாப்பு மேலும் அக்கறையில்லாமல் யாருக்காக இவர்கள் கட்சி நடத்துகிறார்கள் என்பதே பாதிக்கப்பட்ட பொதுமக்களின் மனக்குமுறலாக உள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தந்தையை கட்டையால் அடித்து கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
- ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு! – 78 நாள் சம்பளம் வழங்க முடிவு!
- ராம்நகர் இடைத்தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி போட்டி!
- பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து
- நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது
- உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி
- ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்