உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி

0
475
5 died several injured New Farakka Express train

உத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். (5 died several injured New Farakka Express train)

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் புகையிரத நிலையத்திற்கு அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் புகையிரதம் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

6 பெட்டிகள் தடம்புரண்டதில் அதில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த புகையிரத நிலைய பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

லக்னோ, வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; 5 died several injured New Farakka Express train