மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது

0
602
Journalist Nakkeeran Gopal arrested Chennai Airport

ஆளுநர் பணியில் தலையிட்டதாக நக்கீரன் பத்திரிகையின் தலைவர் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். (Journalist Nakkeeran Gopal arrested Chennai Airport)

ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில், நக்கீரன் கோபாலை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த போது விமான நிலையத்தில் வைத்து கோபால் கைது செய்யப்பட்டார்.

சந்தன மரக் கடத்தல் வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதன் மூலம் பிரபலமான இவர், தமிழக அரசுக்கும் – வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Journalist Nakkeeran Gopal arrested Chennai Airport