சபரிமலை: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த பிரச்னையில், கேரளாவில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.Sabarimala problem crisis protest women’s india tamil news
பம்பை அருகே, நிலக்கல்லில், சபரிமலை ஆச்சார பாதுகாப்பு கமிட்டி சார்பில், காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் துவங்கியுள்ளது
‘சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்கலாம்’ என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில், கேரள அரசு தீவிரமாக உள்ளது.
இதற்கு எதிராக, கேரளாவில் பெண்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பம்பை, எருமேலி, பந்தளம், நிலக்கல், சங்கனாசேரி, செங்கன்னுார் என, பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், சபரிமலையில் உயர் அதிகாரம் உடைய, தாழமண் தந்திரிகளை, பேச்சு நடத்த கேரள அரசு அழைத்தது.
இதையடுத்து, பந்தளம் மன்னர் பிரதிநிதி, நாயர் சேவா சங்க நிர்வாகிகளை, தந்திரி குடும்பத்தினர் சந்தித்தனர்.
பின், தந்திரி கண்டரரு மோகனரரு கூறுகையில், ”தீர்ப்பை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், பேச்சுக்கு செல்வதில் அர்த்தமில்லை.
நாயர் சேவா சங்கம் கொடுத்துள்ள மறுசீராய்வு மனுவில் முடிவு வந்த பின், இதுபற்றி ஆலோசிக்கப்படும்,” என்றார்.
இது குறித்து தேவசம்போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:தீர்ப்பை, தந்திரி குடும்பத்தினர் நன்கு படித்ததால், இனி அரசிடம் பேசவேண்டாம் என, முடிவு எடுத்திருக்கலாம்.
உச்ச நீதிமன்றம், 2007-ல், இதுதொடர்பாக மாநில அரசிடம் கருத்து கேட்டது. ‘மத நம்பிக்கைக்கு உட்பட்டது என்பதால், கமிஷனை நியமித்து முடிவெடுக்கலாம்’ என, அரசு தெரிவித்தது.
ஆனால், அதை எல்லாம் மறைத்து, இந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பம்பை அருகே, நிலக்கல்லில், சபரிமலை ஆச்சார பாதுகாப்பு கமிட்டி சார்பில், காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம், நேற்று துவங்கியது.
நிர்வாகிகள் கூறுகையில், ‘நீதிமன்றத்தில், அரசு தவறான அறிக்கை கொடுத்தது.
சபரிமலைக்கு வரும் இளம் வயது பெண்களிடம், ஐதீகத்தை எடுத்து சொல்லி புரிய வைப்போம்’ என்றனர்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில், தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இதே போல, கேரள அரசும் சட்டம் கொண்டு வந்து, சபரிமலை ஆச்சாரங்களை பாதுகாக்க வேண்டும்.
ராகுல் ஈஸ்வர், தந்திரி குடும்பம்டில்லியிலும் போராட்டம் இப்பிரச்னையில், பெண்களின் போராட்டம் டில்லியிலும் எதிரொலித்தது.
அங்கு சென்று உள்ள கேரள அமைச்சர் ஜெயராஜனின் காரை மறித்த பெண்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். முதல்வர் பினராயி விஜயன் டில்லியில் உள்ளார். அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மனுக்கள் கொடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப இந்திய கடலோர காவல்படை அறிவுறுத்தல்!
- சென்னையில் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் கைது!
- டெல்லி சென்றார் முதலமைச்சர் பழனிசாமி! – நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!
- அசுர வேகத்தில் முன்னேறுகிறது இந்தியா! – பிரதமர் மோடி பெருமிதம்!
- மக்கள் அழைத்ததால் தான் அரசியலுக்கு நான் வந்தேன்! – கமல் ஹாசன்!
- பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் வழக்கு!
- குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்! – கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!