விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்; முதலமைச்சர் வசுந்தரா ராஜே

0
496
Rajasthan govt announces free electricity farmers

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். (Rajasthan govt announces free electricity farmers)

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் திகதிகளை தலைமைத் தேர்தல் ஆணையகம் கடந்த 6 ஆம் திகதி அறிவித்ததன்படி ராஜஸ்தானில் ஒரே கட்டமாக டிசம்பர் 7 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில், அந்த மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் எதிர்வரும் நவம்பர் முதல் அமலுக்கு வரும் என்றும் இந்தத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் 12 இலட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Rajasthan govt announces free electricity farmers