உச்சநீதிமன்ற தீர்ப்பை உறுதியாக நிறைவேற்றுவோம்! – பினராயி விஜயன் திட்டவட்டம்!

0
442
make Supreme Court verdict - Pinarayi Vijayan's proposal india tamil news

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.make Supreme Court verdict – Pinarayi Vijayan’s proposal india tamil news

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்போவதில்லை என்று முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்த நிலையில், இந்து அமைப்புகள் சார்பில் கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு உறுதியாக நிறைவேற்றும் என்றார்.

மேலும் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது அரசின் இந்த நிலைபாட்டுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதே அரசின் கடமை என்று தெரிவித்த அவர், மதநம்பிக்கையாளர்களுடன் மோதுவது அரசின் நோக்கமல்ல என்றும் கூறினார்.

சபரிமலை விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு கேரள அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :