யாழில் வாள்களுடன் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்!

0
413

வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் பெரும் திருட்டை புரிந்துள்ளனர். Jaffna Sword Hang Theft Sri Lanka Tamil News

வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு இன்று அதிகாலை 12.00 மணியளவில் மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்த சுமார் பத்து பேர் அடங்கிய குழு, வாள்களை காட்டி அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள், 4000 ரூபா ரொக்கப்பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

மேலும் சுமார் ஒரு மணி நேரம் வரை குறித்த வீட்டில் நின்ற கொள்ளையர்கள் கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.

இக்கொள்ளை தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

Tamil News Live

Tamil News Group websites