கொழும்பில் கூட்டு எதிரணி நடாத்திய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் இருந்த எல்.எம்.ஜீ. துப்பாக்கிகளை பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். Mahinda Rajapaksa Shocking Statement Sri Lanka Tamil News
அன்றைய தினம் , பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் கெப் ரக வாகனங்கள் அனைத்து மூலை முடுக்குகளிலெல்லாம் பயணித்தன. இந்த வாகனத்தில் எல்.எம்.ஜீ. ரக துப்பாக்கிகள் தான் இருந்துள்ளன.
பிரச்சினைகள் ஏதாவது அன்று வந்திருந்தால், இந்த துப்பாக்கிகளைத் தான் அவர்கள் பயன்படுத்தியிருப்பர். இதன்போது, ஆயிரக் கணக்கில் மக்கள் மரணிக்க நேர்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் யார் பொறுப்புச் சொல்வது என மகிந்த கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!
சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!
விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!
பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!