2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்

0
487
Success most seats 2019 election

2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். (Success most seats 2019 election)

டெல்லியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்:கும் போதே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 120 கோடி இந்தியர்கள் மீது ஒற்றை கொள்கை திணிக்கப்படுகின்றது. சொந்த மக்களுக்கு எதிராகவே அரசு போர் தொடுத்துள்ளது.

ரூபாய் நோட்டு இரத்து திட்டம் ஜிடிபியில் 2 சதவீதத்தை அழித்து விட்டது. ஜிஎஸ்டியிலும் வேறு கருத்துகளை சொன்னோம். ஆனால், அரசு அதனை கவனிக்கவில்லை.

பகுஜன் சமாஜ்கட்சியுடன் கூட்டணி அமைக்காதது, தேர்தலில் பாதிக்கும் என கருதவில்லை. பல ஆண்டுகளாக கோயில்கள், குருத்வாராக்கள், மசூதிகளுக்கு சென்று வருகிறேன். ஆனால், திடீரென இது முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.

நான் கோயிலுக்கு செல்வதை பா.ஜ, விரும்பவில்லை என கருதுகிறேன். இதனால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நினைக்கிறேன். தாங்கள் மட்டுமே, கோவிலுக்கு செல்ல உரிமை உள்ளதாக பா.ஜ.க நினைக்கலாம்.

பா.ஜ.கவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் தான். நாட்டின் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்பாட்டில் எடுக்க ஆர்எஸ்எஸ் முயற்சிக்கின்றது. நாட்டில், அரசியல் அமைப்புகளை கைப்பற்ற முயல்வது அபாயகரமானது.

இந்தியாவில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று வேலைவாய்ப்பின்மை. சிறு குறு தொழில்களை அதிகளவில ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அரசு அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது.

வெளியுறவு கொள்கையில், திட்டமிடல் எண்ணம் இல்லை. டோக்லாம் விவகாரத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், நேபாளமும் மாலைத்தீவும் நம்மை விட்டு சென்றுவிட்டன.

கூட்டணி கட்சிகள் விரும்பினால், நான்பிரதமர் வேட்பாளராக இருப்பேன். நான் ஆட்சிக்குவந்தால், சிறுகுறு தொழிலை வலுப்படுத்துவேன். தாங்கள் முக்கியமானவர்கள் என்ற எண்ணத்தை விவசாயிகள் மத்தியில் உருவாக்குவேன்.

குறைந்த செலவில் தரமான மருத்துவம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை நாடு முழுவதும் ஏற்படுத்துவேன்.

2019 தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.என்னை விமர்சனம் செய்யும் போது நான் கோபப்பட்டது கிடையாது. எனக்கு, தாய், சகோதரி, நண்பர்கள் உள்ளனர். எனது வாழ்க்கையில், சிறப்பான நபர் என யாரும் கிடையாது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Success most seats 2019 election