ஜெ.மரணம் தொடர்பாக 3 மாத கால அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்!

0
417

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டு எழுதிய கடிதத்தை நாளை அரசுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.arumugamasi commission ask three-month extension india tamil news

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

தற்போதுவரை, 105 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள ஆணையம், மேலும், மூத்த மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட பலரிடம் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணை ஆணையத்திற்கு மாநில அரசு வழங்கிய காலக்கெடு வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனால், மேலும் 3 காலத்திற்கு அரசிடம் கால நீட்டிப்பு கோர ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனை, ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால், நீதிபதி ஆறுமுகாமி விசாரணை ஆணையம், அதற்கான கோரிக்கை கடிதத்தை நாளை அரசுக்கு அனுப்பி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னரே, அரசு, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 2 முறை காலஅவகாசம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :